புதுதில்லி,செப்.5- சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இந்த பேச்சால் பாஜக தலைவர்களும் சங்கிகளும் அலறுகிறார்கள். அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரமகம்ச ஆச்சாரியா என்ற சாமியார் கொலை மிரட்டல் விடுத்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சாமியார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அந்த அயோ த்தி சாமியார் மீண்டும் கொலைமிரட்டல் விடுத்துள் ளார். சாமியார் அளித்த பேட்டி யில், உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்கத் தயார் என்று வெறித்தனமாக பேசி யுள்ளார்.